சிலுவைப் பலி!
நற்செய்தி: யோவான் 3:13-15.
நல்வழி:
எந்த பலியால் என்வினை சாகும்?
இப்படி எவரும் நினைத்தோமா?
அந்த வழியால் நல்மீட்பாகும்,
ஆண்டவரோடு இணத்தோமா?
இந்த வாழ்க்கை வீணாய்ப் போகும்;
இதனால் இறையை நினைப்போமா?
சொந்த மகனைப் பலியாய் ஈகும்,
சிலுவையோடு இணைப்போமா?
ஆமென்.
-செல்லையா.