எப்படி அறிவேன்?

எப்படி அறிவேன்?
நற்செய்தி : யோவான் 3:9-12.

நல்வழி:  

அக்கமும் அறியேன், பக்கமும் அறியேன்.

அடுத்திருப்போரின் நெஞ்சமும் அறியேன்.

இக்கட்டு நேரமே இறைவா என்பேன்.

இதர நாளிலோ யார் அவர் என்பேன்.

திக்கெட்டாத் தொலை எப்படி அறிவேன்?

தேவை இயேசு என்றும் அறிவேன்.

கைக்கெட்டுமருகில் காண்பேன் என்பேன்;

கடவுள் அருளே இயேசு என்பேன்!

ஆமென்.

-செல்லையா.