காற்று போன்று ஆவியர்!

காற்று போன்ற ஆவியர்!

நற்செய்தி: யோவான் 3:7-8.

நல்வழி: 


காற்றின் ஒலியை நாம்  கேட்டோம்; 

காற்றைக் கண்ணில் காணவில்லை. 

ஆற்றல்  அறிவில் குறை கண்டோம்;

ஆயினும் நாமோ நாணவில்லை.

மாற்றும் ஆவியர் குரல் கேட்போம்;


மறுப்பின் என்றும் பேணலில்லை.

போற்றும் புதுவழி நாம் காண்போம்;

புனித வாழ்வில் கோணலில்லை!

ஆமென்.


-செல்லையா.