இரவில் வந்த அறிஞன்!

இரவில் வந்த அறிஞன்!
நற்செய்தி: யோவான் : 3:1-2.
1. யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
2. அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.


நல்வழி:


அச்சமுள்ள அறிவுளோர்,

அநீதியிருளில் ஒளிவதால்,

மிச்சமுள்ள ஏழையர்,

மெய் வருந்த விழுகிறார்.

துச்சமென்று துணிபவர்,

தூயயொளியில் வருவதால்,

எச்சில்லுண்ண மறுக்கிறார்;

ஏழைக்கென்று எழுகிறார்!


ஆமென்.


-செல்லையா.