காட்டில் கேட்ட ஒலி

காட்டில் கேட்ட ஒலி!  

நற்செய்தி: யோவான் 1:21-23.  

நல்வழி:  


காட்டிலொலிக்கும் கடவுள் வாக்கு,  
வீட்டிலும் வந்து, ஒலிக்கட்டுமே. 
மீட்டியிசைக்கும் அவ்வொலி கேட்டு,  
நாட்டிலும் மக்கள், சொலிக்கட்டுமே.   

ஏட்டினில் பார்த்து, எதையோ சேர்த்து,,  

தீட்டினில் புரள்தல், முடிக்கட்டுமே.  
மாட்டிக்கொண்டோர் நிலையும் கண்டு,  
நீட்டிடும் அன்பு, பிடிக்கட்டுமே! 
ஆமென்.  
-செல்லையா.

மகிழு! மகிழ்வி!

யாவரும் ஒன்றே!
இறைவன் முன்பு யாவரும் ஒன்றே.

இதுவே சட்டம், எண்ணுதல் நன்றே.
பறையர் பார்ப்பர் என்பது போன்றே,
பாரைப் பிரித்தல் நேர்மை அன்றே.
திறமை, அறிவு வளர்த்தல் இன்றே,
தேவையாகும், தேடு, சென்றே.
மறையோன் ஈந்த வாழ்வு என்றே,

மகிழ்வி, மகிழு, தீமை வென்றே!
-செல்லையா.