என் தந்தையார்!

என் தந்தையார்! 

குடித்து வந்த மகனைக் கண்டு, 

குடியா தந்தை என் செய்வார்? 

அடித்து வைய விருப்பம் அற்று,

 அனுப்பி விட்டார், தந்தையார்.  

பிடித்து வந்த விவிலியம் கண்டு,   

பின்னாட்களில் என் செய்தார்?  

படித்து, அப்படி வாழு என்று,

பணித்து விட்டார், தந்தையார்! 

-செல்லையா.

அவர் வாக்கு கேளுங்கள்!

அவர் வாக்கு கேளுங்கள்!

நற்செய்தி :  யோவான்  2:5  

நல்வழி:  
மரியாள் கூறும் அறிவுரை கேளும்.
மதித்து நடக்க, நன்மையே நாளும்.  
சரியாய் இயேசு சொற்படி வாழும். 
சாத்தான் அகல, உண்மையே ஆளும்.  
திரியாய் எரியும் அன்னையைப் பாரும்.
தெரியும் நேர்வழி அடையவே வாரும்.  
பரிசாய் மீட்பும் கிடைக்கச் சேரும்.  
பாவியருக்கும், அன்பையே கூறும்! 
ஆமென். 
-செல்லையா.