இல்லை, நண்பா, இல்லை.

இல்லை, நண்பா, இல்லை! 


‘சர்மா’ என்று பெயரும் இல்லை; 

சாதி காட்டும் உயர்வும் இல்லை. 

‘வர்மா’ என்று தொழவும்  இல்லை.  

வறுமை மட்டும் விழவும் இல்லை. 

‘கர்மா’ என்று அழைக்கவுமில்லை. 

கதைகள் கட்டிப் பிழைக்கவுமில்லை. 

‘தர்மா’ இங்கு குறையின்றி இல்லை.

தந்துவூட்டும் இறையன்றி இல்லை!


-செல்லையா.