மகிழு! மகிழ்வி!

யாவரும் ஒன்றே!
இறைவன் முன்பு யாவரும் ஒன்றே.

இதுவே சட்டம், எண்ணுதல் நன்றே.
பறையர் பார்ப்பர் என்பது போன்றே,
பாரைப் பிரித்தல் நேர்மை அன்றே.
திறமை, அறிவு வளர்த்தல் இன்றே,
தேவையாகும், தேடு, சென்றே.
மறையோன் ஈந்த வாழ்வு என்றே,

மகிழ்வி, மகிழு, தீமை வென்றே!
-செல்லையா.