அத்திமரம் துளிர்க்கிறதே!

அத்திமரம் துளிர்க்கிறதே!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:29-31.  

29  அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.

30  அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.

31  அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

அத்திமரம் துளிர்க்கிறதே;  

அருள்வாக்கு பலிக்கிறதே.  

எத்திசையும் கலங்கிடுதே;    

இயலாமல் புலம்பிடுதே. 

புத்தியுள்ள மங்கையரே, 

புனிதமுடன் தங்குவரே.  

இத்திருச் சொல் ஏற்போரே,   

இறையரசு பார்ப்பாரே!  

ஆமென்.