உயிர்த்தெழுதல்!

உயிர்த்தெழுதல்! 
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:27-33. 

27  உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயரில் சிலர் அவரிடத்தில் வந்து:

28  போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாயிருந்து பிள்ளையில்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானமுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.

29  சகோதரர் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.

30  பின்பு இரண்டாஞ்சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.

31  மூன்றாஞ்சகோதரனும் அவளை விவாகம்பண்ணினான். அப்படியே ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனார்கள்.

32  எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.

33  இவ்விதமாய் ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணியிருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

இனிவரும் மணித்துளி எப்படியிருக்கும்,  

என்றறியாத அறிவிலி நான்,  

மனிதரின் அறிவில் எட்டாதிருக்கும்,  

மறுமையை எங்கே கற்றிடுவேன்?

பனிமலை ஒன்று மறைந்திருந்தாலும்,

பரிதி கரைப்பது காணும் நான்,   

புனிதரேசு வழங்கும் உயிர்ப்பை,

பொய்யா மொழியில் பெற்றிடுவேன்!  

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.