வளர்க!

வளர்க!!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:25-26.

25  அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.

26  அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:

பற்று வளர, பண்பும் வளரும்;

பற்றியவரின் வாழ்வும் மலரும்.

அற்று போகும் இடமும் நோக்கும்;

அழிவு என்றே பெயருண்டாக்கும்.

பெற்று வாழும் கிறித்தவர் காணும்;

பிசாசும் கூட அவர்முன் நாணும்.

கற்று நீவிர் பற்றில் தேறும்.

கடவுளுக்கு நன்றி கூறும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

www.thetruthintamil.com