வளர்க!!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:25-26.
25 அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.
26 அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கிறித்துவில் வாழ்வு:
பற்று வளர, பண்பும் வளரும்;
பற்றியவரின் வாழ்வும் மலரும்.
அற்று போகும் இடமும் நோக்கும்;
அழிவு என்றே பெயருண்டாக்கும்.
பெற்று வாழும் கிறித்தவர் காணும்;
பிசாசும் கூட அவர்முன் நாணும்.
கற்று நீவிர் பற்றில் தேறும்.
கடவுளுக்கு நன்றி கூறும்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
www.thetruthintamil.com