திருச்சட்டம்!

திருச்சட்டம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:20-21.

20  விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்.

21  அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

அத்து மீறும் மனிதரைத் தடுக்கும்,

ஆண்டவர் வழியே திருச்சட்டம்.

பத்து கட்டளை என்று சுருக்கும் ,

பழைய ஏற்பின் அருட்திட்டம்.

மொத்த கருத்தும்  உள்ளடக்கும்,

முடிவு கேட்டது திருக்கூட்டம்.

இத்தரையில் இயேசு காட்டும்,

இனிய அன்பால் விண் எட்டும்!

ஆமென்.