விலையில்லை!

விலையின்றிக் கொடுப்போம்!


நெல்லும் மணியும் நிறைந்த வயலை,


நெடு வழியாக்கத் துடிக்கும் நாம்.

வெல்லும் வாழ்க்கை ஏழையுமடைய,

விலையிலாக் கல்வி கொடுப்போமா? 

கொல்லும் கொடிய குண்டினை வாங்கக்
கோடிகோடி கொடுக்கும் நாம்.

செல்லும் ஏழைகள் நீடூழி வாழச்

செலவிலா மருத்துவம் கொடுப்போமா?


-கெர்சோம் செல்லையா.