வாழ்வு வந்தபோது!

வாழ்வு வந்தபோது!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:1-2.

1   சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

2   ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.

கிறித்துவில் வாழ்வு:

தாழ்வு நோக்கிப் பெயர்கையிலே

தாங்கும் என்று அழுதவர்கள்,

வாழ்வு வந்து உயர்கையிலே,

வறியரை நினைக்கலையே.

ஏழ்மையென்று வெறுக்கையிலே,

இறைநிழலை மறுப்பதனால்,

கீழ்மையுற்று வருந்திடுவார்;

கிறித்தவரும் உணரலையே!

ஆமென்.