உப்பும் நாமும்!

உப்பாயிருப்போம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா14:34-35.

34  உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?

35  அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப் போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

உப்பின் ருசியை உணவில் கலக்க, 

உண்பவர் வாயில் தேன் ஊறும்.

அப்புறம் உண்பேன் என்பவர்கூட,

அன்பாய்க் கெஞ்சும் நிலை பாரும்.

சப்பென உணவு சுவையற்றிருந்தால்,

சாப்பிடும் வாய்கள் குறை கூறும்.

குப்பையென்று கொட்டாதிருக்க,

கொஞ்சம் உப்பாகவே மாறும்!

ஆமென்.