விருந்து!

யாருக்களிக்கிறோம் விருந்து?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 14:12-14.


12  அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்.13  நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக.14  அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
யாரும் கொடாத விருந்தையா;
இயேசு சொல்வது கேளையா.
வாரும், என நாம் அழைப்பவர்கள்,
வறுமையில் வாடும் ஏழையா?
ஊரும் உலகும் மகிழுகையில்,
உண்ணாதுறங்குவார் உண்டையா.
தீரும் அவரது பசியையா,
தெய்வ அன்பு கொண்டையா!
ஆமென்.