இந்தியன் யார்?

இந்தியன் யார்?

சாதியைத் தாண்டிப் பார்க்கிறவன்,
சரியிணை என்று சேர்க்கிறவன்,
ஆதிக்க ஆளுமை வெறுக்கிறவன்,
அவன்தான் இனிமேல் இந்தியன்.

சமயம் கடந்து பாராதான்,
சரியிணை என்று சேராதான்,
அமைதி வாழ்வை வெறுக்கின்றான்;
அவன்தான் எதிர்ப்பு இந்தியன்!

-கெர்சோம் செல்லையா.

விருந்து வீடு!

கிறித்துவின் வாக்கு:லூக்கா 13:28-30.

28 – நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.
29 – கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்.
30 – அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
எட்டு திக்கிலும் வந்தமர்வார்,
இறையரசில் விருந்துண்வார்.
கெட்டு விட்டார் அது காண்பார்,
கிறித்திலாது வருந்துகிறார்.
திட்டு கொட்டும் இந்நாட்டார்,
திறவாக் கதவைத் தட்டுகிறார்.
விட்டு விட்டீர் வாய்ப்பென்பார்,
விருந்து வீட்டைப் பூட்டுகிறார்!
ஆமென்.