நம்மைவிடவும் நேர்மையுள்ளோர்!

நம்மைவிடவும் நேர்மையுள்ளோர்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:1-3.

1பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.
2இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
3அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.

கிறித்துவில் வாழ்வு:
நம்மை விடவும் நேர்மையுள்ளோர்,
நமக்கு முன்பே விடை பெற்றார்.
இம்மை வாழ்வு இலைமேல் தண்ணீர்;
என்றுகூறியே கடை விற்றார்.
செம்மை வாழ்வு இறையால் பெறுவார்,
செல்லுமிடத்தை நன்கறிவார்.
அம்மாப் பெரிய அருளடைவதினால்,
ஆண்டவருடனே இங்குறைவார்!
ஆமென்.

ஒப்புரவு!

சட்டம் தன் கடமையைச் செய்யும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:58-59.

58உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைச்சாலையில் போடுவான்.
59நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
சட்டமென்னை என்ன செய்யும்?
சரிதான் போய்யா என்பவரே,
திட்டமிட்டவர் இறைவன் ஆகும்;
திமிராய் நடப்பின் தண்டனையே.
கெட்டநேரம் துரத்தும் முன்னே,
கேட்டுப் பெறுவீர் ஒப்புரவே.
விட்டுவிட்டால், கட்டி விடுவார்;
விடுதலை இல்லை அப்புறமே!
ஆமென். 

எப்படி இருக்கும் 2020?

எப்படி இருக்கும் 2020?


வந்த இவ்வாண்டு எப்படி இருக்கும்?

வழியறியாதோர் கேட்கின்றார்.

முந்தைய நாட்களில் விதைத்தது விளையும்;

மும்மை தெய்வம் ஆள்கின்றார்.

எந்த நன்மையை எவர்க்களித்தோமோ,

இரண்டல்ல, நூறெனத் தருகின்றார்.

ஈந்தது தீமை என்றாயிருந்தால்,

இறைவன் உணர்த்த வருகின்றார்!


-கெர்சோம் செல்லையா.