அறிவோம், அறிவார்!

அறிவார் அவர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:25-27.

25வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
26அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
27ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
அன்பரைக் கண்டோம் என்பதல்ல;
அவருரை கேட்டோம் என்றுமல்ல;
இன்பமாம் விருந்தில் பங்குமல்ல;
இயேசுவுள் வருதலே கிறித்தவமாம்.
வன்முறை என்றும் நல்லதல்ல;
வஞ்சக நெஞ்சும் நன்மையல்ல.
நன்முறை கிறித்துவின் அன்பேயாம்;
நடந்தால் அவரும் அறிவாராம்!
ஆமென்.