புளித்த மா!

புளித்த மாவு போல்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா13:20-21.

20மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்?
21அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடிமாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
கொஞ்சம் புளித்த மாவைச் சேர்த்தால்,
குடுவை முழுதும் புளிக்கிறது.
வஞ்சம் இல்லார் நம்மில் சேர்ந்தால்,
வாழ்வும் மகிழ்வால் களிக்கிறது.
அஞ்சும் தீமை அரசுள் நுழைந்தால்,
அதுவே அனைத்தினை அழிக்கிறது.
கெஞ்சும் நமக்கு அமைதி எங்கே?
கிறித்து அரசே அளிக்கிறது!
ஆமென்.