ஒப்புரவு!

சட்டம் தன் கடமையைச் செய்யும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:58-59.

58உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைச்சாலையில் போடுவான்.
59நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
சட்டமென்னை என்ன செய்யும்?
சரிதான் போய்யா என்பவரே,
திட்டமிட்டவர் இறைவன் ஆகும்;
திமிராய் நடப்பின் தண்டனையே.
கெட்டநேரம் துரத்தும் முன்னே,
கேட்டுப் பெறுவீர் ஒப்புரவே.
விட்டுவிட்டால், கட்டி விடுவார்;
விடுதலை இல்லை அப்புறமே!
ஆமென்.