அறியாத அவ்வேளை!

அறியாத அவ்வேளை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:38-40.

38அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.39திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.40அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
நெஞ்சைத் திருடும் தெய்வம் வந்து,
நேரில் அழைக்கும் அவ்வேளை,
கொஞ்சம்கூட அறியாததனால்,
கிறித்து போன்று வாழ்வோமே.
நஞ்சை இன்று அமுது என்று,
நம்பி வாழ்வை அழிக்காமல்,
கெஞ்சி நாமும் திருந்தி வாழ,
கிறித்து முன்பு தாழ்வோமே!
ஆமென்.

கிறித்துவில் வாழ்வு:
இங்கே யாரோ எச்சில் இடுவார்,
என்று நினைத்துப் பிழைக்காமல்,
அங்கேயிருந்து, அனைத்தும் காணும்,
ஆண்டவர் மகிழ ஊழைப்போமே.
தங்க மகனே தன்மண நாளில்,
தந்திடும் விருந்தில் பங்குபெற,
எங்குமெதிலும், என்னிலை வரினும்,
யாவிலும் உண்மை கொள்வோமே!
ஆமென்.

உண்மை ஊழியத்தின் பரிசு!

உண்மை ஊழியத்தின் பரிசு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:35-37.

35உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும்,
36தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள்.
37எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச்சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
இங்கே யாரோ எச்சில் இடுவார்,
என்று நினைத்து உழைக்காமல்,
அங்கேயிருந்து, அனைத்தும் காணும்,
ஆண்டவருக்கு ஊழைப்போமே.
தங்க மகனே தன்மண நாளில்,
தன் கையாலே விருந்தளிக்கும்,
எங்குமில்லா நற்பேறடைய,
எதிலும் உண்மை கொள்வோமே!
ஆமென்.

அங்கே வாங்கி, இங்கே கொடுப்போம்!

இங்கே கொடுத்து அங்கே வாங்கும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:33-34.

33உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப்பிச்சைகொடுங்கள், பழமையாய்ப்போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை.
34உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.

கிறித்துவில் வாழ்வு:
அங்கே வாங்கி, இங்கே கொடுக்கும்,
ஆண்டவர் விருப்பைப் புறக்கணித்து,
இங்கே வாங்கி எதுவும் கொடாது,
இழக்கின்றவரோ இன்னாட்டார்.
எங்கே சேர்த்தால் நிலைக்கும் என்னும்,
இறையறிவை உட்கொண்டு,
பங்கம் இன்றி, பாங்காய்க் கொடுப்பின்,
பரத்திற்கவரே நன்வீட்டார்!
ஆமென்.

ஒன்றைத் தேடி!

ஒன்றைத் தேடுவோம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:31-32.

31தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
32பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.
கிறித்துவில் வாழ்வு:
ஓன்று மட்டும் போதுமென்று,
உம்மை நோக்கிப் பார்க்கையில்,
இன்று எங்கள் இல்லங்களில்,
இல்லை ஒரு குறையாம்.
சென்று பார்த்துத் தேடுகின்ற,
சிற்றின்பமாம் வழிகளில், 
நின்று எவர் வேண்டினாலும்,
நேரிடாது நிறைவாம்!
ஆமென்.

மின்தூக்கி

மின்தூக்கி பொருத்துவதாய் என்வீடு வந்தார்.

நன்மதி இல்லாதோர் நான்கு இலட்சம் எடுத்தார்.

பன்னெடு நாட்கள் துன்பந்தான் தந்தார்.

இன்னாளில் இறைமகனோ, நல்தீர்ப்பு கொடுத்தார்.

நன்றிகூறும்,
கெர்சோம் செல்லையா.