அறியு முன், அறிந்த பின்!

அறியு முன், அறிந்த பின்!

கிறித்துவின் வாக்கு:லூக்கா 12:47-48.

47தன் எஜமானடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
48அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அறியாது செய்யும், அனைத்துத் தவறும்,
ஆண்டவர் அருளால் பொறுக்கப்படும்.
சரியாகக் கேட்டு, தவற்றைத் தவிர்த்தால்,
சாவின் கட்டுகள் அறுக்கப்படும்.
தெரியாது ஆண்டவர் விடுவாரென்று,
துணிகரம் கொண்டால், வெறுக்கப்படும்.  
பரியாகப் போர் வெறி நிறைந்தவராகி,
பாவம் தொடர்ந்தால், நொறுக்கப்படும்!
ஆமென்.