வெங்காயம்!
வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன?
எங்காய உடல் வளர்க்க,
எங்கெங்கோ பாடியவர்,
பொங்காத உணவினுக்கு,
வெங்காயம் இல்லையென்று,
சங்காக மனை முழங்க,
தங்கம்போல் தேடுகிறார்!
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
வெங்காயம்!
வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன?
எங்காய உடல் வளர்க்க,
எங்கெங்கோ பாடியவர்,
பொங்காத உணவினுக்கு,
வெங்காயம் இல்லையென்று,
சங்காக மனை முழங்க,
தங்கம்போல் தேடுகிறார்!
-கெர்சோம் செல்லையா.
உண்மையில்லாதோர் சேரும் இடம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:45-46.
45அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால், |
46அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான். கிறித்துவில் வாழ்வு: உண்மையில்லாதோர் சேரும் இடத்தில், ஒரு பெரும் பங்கு சேர்ப்போர்தான், அண்மையில் நமது தலைவர்களாயினர்; அதுதான் இன்றைய வரலாறு. கண்ணினில் நீரும், நெஞ்சினில் வலியும், கடந்த நாட்களில் தந்தவர்தான், வெண்மையாய் மாறி, மனந்திருந்திடுவார்; விடுதலை வாக்கை நீ கூறு! ஆமென். |