எங்கு சேர்க்கிறோம்?

எங்கிருக்கிறது என் சொத்து?

கிறித்துவின் வாக்கு: லூக்கா12:21

21தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
இங்கு சேர்க்கும் சொத்தில் சிறிது
இந்திய ஏழைக்கீவதினால்,
அங்கு விண்ணில் ஆண்டவருக்கு,
அளிக்கும் கடனாய்ப் பெருத்திடுதே.
தங்க மாளிகை கட்டி எழுப்பி,
தவற்றைக் காசாய்க் குவிப்பதினால்,
எங்கு எவர்க்கும் பயனில்லாது,
இறைமுன் கடுகாய்ச் சிறுத்திடுதே!
ஆமென்.