உயிரே! உயிரே!

உயிரே! உயிரே!


ஒருவர் இருவர் இறப்பது கண்டு,

ஏதோ விபத்தெனச் செல்கின்றார்.

பெருந்திரள் மக்கள் மடிவது கேட்டு,

பிறவிப் பயனெனச் சொல்கின்றார்.

குருதியெடுத்தல் சரியேயென்று,

கொள்பவர் இன்று வெல்கின்றார்.

அருமை உயிரோ ஆண்டவர் ஈவு;

அதை ஏன் மக்கள் கொல்கின்றார்?


-கெர்சோம் செல்லையா.