அன்பிலாத காணிக்கை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:42.

42பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.

கிறித்துவில் வாழ்வு:
காணிக்கைகள் கொடுத்தால் போதும்;
கடவுள் அருளே கிடைக்குமென
ஆணித்தரமாய் நம்புகின்றாரே!
அறியாமையன்றி வேறில்லை.
நாணிக் கோணி நம் முன் இரக்க,
நல்லிறை ஒன்றும் மனிதனில்லை.
பேணிக் காக்கும் அவரது அன்பைப்
புரிந்தாலன்றிப் பேறில்லை!
ஆமென்.