அழுக்கு எங்கே?

ஒரு வண்டி அழுக்கை உள்ளே வைத்து!
கிறித்துவின் வாக்கு:லூக்கா 11:37-41.37அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசேயன் ஒருவன் தன்னுடனே கூட அவர் பகற்போஜனம் பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய்ப் பந்தியிருந்தார்.38அவர் போஜனம்பண்ணுகிறதற்குமுன் கைகழுவாமலிருந்ததைப் பரிசேயன் கண்டு, ஆச்சரியப்பட்டான்.39கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது.40மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ?41உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும்.


கிறித்துவில் வாழ்வு:

இரு கை கால்களைக் கழுவிக் கொண்டு,

யான் மட்டும் தூய்மை என்றோரே,

பெரு வண்டி அழுக்கை மூடிக்கொண்டு,

பெருமையில் தொலைந்து போனீரே.

ஒரு முறைகூட உமக்குச் சொல்வேன்;

உள்ளழுக்கேதான் கேடு தரும்.

அருளால் கழுவும்; ஏழைக்கிரங்கும்;

அப்புறம் பாரும், தூய்மை வரும்!

ஆமென்.