விடுதலை நாள் வாழ்த்து!

விடுதலை நாள் வாழ்த்துகள்!


எழுபதும் இரண்டும் கடந்த பின்னும்,

இந்தியர் ஒன்றெனக் காட்டவில்லை.

பழுதினைக் கொணரும் தீதென அறிந்தும்,

பாழாம் சாதியை ஓட்டவில்லை.

அழுதிடும் மக்கள் அலறிக் கேட்டும்,


அவரையும் உறவெனக் கூட்டவில்லை.

தொழுகையை நாடும் தலைமைக்கின்னும்,

தூய்மை என்றால் நாட்டமில்லை!


-கெர்சோம் செல்லையா.