விடுதலை நாள் வாழ்த்துகள்!
எழுபதும் இரண்டும் கடந்த பின்னும்,
இந்தியர் ஒன்றெனக் காட்டவில்லை.
பழுதினைக் கொணரும் தீதென அறிந்தும்,
பாழாம் சாதியை ஓட்டவில்லை.
அழுதிடும் மக்கள் அலறிக் கேட்டும்,
அவரையும் உறவெனக் கூட்டவில்லை.
தொழுகையை நாடும் தலைமைக்கின்னும்,
தூய்மை என்றால் நாட்டமில்லை!
-கெர்சோம் செல்லையா.