ஓநாய்களுக்குள்ளே ஓர் ஆடு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:3.

3 புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
பேநாய்க் கடித்தவர் முன்சென்று,
பேரிடர் வராது வந்திடலாம்.
ஒநாய்க் கூட்டம் உள்நுழைந்து,
ஓராடுயிருடன் வந்திடுமோ?
ஆனாலும் உம் சொல் கேட்டு,
அடியர் நாங்கள் செல்கின்றோம்.
நானாவிதத்தின் தீங்குகளும்,
நன்மை தராமல் முந்திடுமோ?
ஆமென்.

அறுப்போ மிகுதி!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:1-2.

1இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.
அறுப்போ மிகுதி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:1-2.
1 இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.
2 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
கிறித்துவில் வாழ்வு:
அறுக்கும் நிலத்தின் அளவோ பெரிது;
அறுவடையாளரின் தொகையோ சிறிது.
பொறுக்கும் இறையின் அருளோ பெரிது;
புனிதர் செய்யும் தொண்டோ சிறிது, 
வெறுக்கும் மனிதரின் கூட்டமோ பெரிது.
வேண்டுதலாலே மாறுது சிறிது.
நொறுக்கும் ஐயா, எம்மைச் சிறிது;
நிகழும் நன்மை நாட்டில் பெரிது!
ஆமென்.

கலப்பையைப் பிடிப்போரே!

கலப்பைப் பிடித்து உழுவோரே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:61-62.61

பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.62 அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.


கிறித்துவில் வாழ்வு:

வீட்டார் அனுமதி கிடைத்த பின்னர்,

விரும்பும் ஊழியம் செய் என்பார்.

நாட்டார் எதிர்க்கிறார் என்றறிந்தால்,

நம்மவர் எப்படி அனுப்பிடுவார்?

போட்டார் இறைமகன் ஓராணை;

போக்குச் சொன்னவர் திணறுகிறார்.

காட்டாதே முகம் பின்பக்கம்;

கலப்பையைப் பிடித்து உழு என்றார்!

ஆமென்.