முதற்கண் வணங்கிடுவோம்!கிறித்துவின் வாக்கு: 10:5-6.

5ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.
6சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.

கிறித்துவில்  வாழ்வு:

மாற்றார் நம்முன் மமதையில் இருந்தும்,
மதித்து முதற்கண் வணங்கிடுவோம்.
தோற்றார் என்றே நமை நினைத்தாலும்,
தூய அமைதிக்கு இணங்கிடுவோம்.
வேற்றாராக வெறுக்கு மிந்நாட்டில்,
விண் வாக்கின்படி தாழ்ந்திடுவோம்.
போற்றல் புகழ்ச்சி இறையால் கிடைக்கும்;
புனிதர் வழியில் வாழ்ந்திடுவோம்!
ஆமென்.