கலப்பையைப் பிடிப்போரே!

கலப்பைப் பிடித்து உழுவோரே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:61-62.61

பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.62 அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.


கிறித்துவில் வாழ்வு:

வீட்டார் அனுமதி கிடைத்த பின்னர்,

விரும்பும் ஊழியம் செய் என்பார்.

நாட்டார் எதிர்க்கிறார் என்றறிந்தால்,

நம்மவர் எப்படி அனுப்பிடுவார்?

போட்டார் இறைமகன் ஓராணை;

போக்குச் சொன்னவர் திணறுகிறார்.

காட்டாதே முகம் பின்பக்கம்;

கலப்பையைப் பிடித்து உழு என்றார்!

ஆமென்.