அலகையும் அதன் ஆவிகளும்!

அலைக்கழிக்கும் அலகையின் ஆவிகள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:40-42.
40 அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.
41 இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.
42 அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.

கிறித்துவில் வாழ்வு:
அலகையும் அவன் ஆவிகளும்,
அல்லல் அடுக்கும் வேளைகளில்,
கலங்கிடும் மக்கள் துயர் நீக்க,
கடவுளின் பிள்ளையால் இயலலையே!
உலகமும், அதன் உதவிகளும்,
ஒருங்கிணைந்தும் இது இயலாது.
விலகிடா இறையின் விண்ணருள்தான்
விரட்டும் என்று முயலலையே!
ஆமென்.

பவானி ஆறே!

பார்த்து மகிழ்ந்த பவானி ஆறே,
பக்கம் சரிந்ததால் கேரள நீரே!
ஆர்வமாய்க் கேட்கிறார் தமிழ் நாட்டாரே;
அவரைவிடின் நீ, காட்டாறே!

-கெர்சோம் செல்லையா.

கண்ணீர் துடைப்பார்!

கண்ணீர் துடைப்பார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:37-39.
37 மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
38 அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருளவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான்.
39 ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது, அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கின பின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது.
கிறித்துவில் வாழ்வு:
பிள்ளையின் வலியைக் கண்டு கலங்காப் 
பெற்றோர் உண்டோ நம் நாட்டில்?
தள்ளி விட்டகன்றுத் தவறு செய்தாலும்,
தந்தையர் துடிப்பரே தம் வீட்டில்!
அள்ளிக்கொண்டே, அணைக்கத் தாவும், 
ஆண்டவர் செல்வரோ அவர் பாட்டில்?
கள்வனுக்கருளிய கடவுட் மைந்தன்,
கண்களைத் துடைப்பார் உம் கூட்டில்!
ஆமென்.

வேண்டாம் மழை!

விளையாட்டு பார்க்க மழை வேண்டாம்;
வீட்டில் குடிக்கவோ நீர் வேண்டும்.
தலைகாட்டும் இத்தன்னலந்தான்,
தவறெனப் புரிந்து விடவேண்டும்!
களியாட்டு, கூத்தே போதுமென்றால்,
கஞ்சியும் நீரும் ஏன் வேண்டும்?
பலியாகப் போகும் தமிழ் நாடே,
படுக்கை விட்டு நீ எழவேண்டும்!

-கெர்சோம் செல்லையா.

அமைதியாய் இருக்க அறிவீரே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:34-36.
34 இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள்.
35 அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.
36 அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
திருப்பணி செய்திடும் ஊழியரே,
தெய்வத்தின் திட்டம் தெரிவீரே.
ஒருசில இடங்களில் பேசாமல்,
ஊமையாய் இருப்பின் புரிவீரே.
கருப்பொருள் கற்கும் காலம்வரை,
கடவுளை மீறிச் செல்லீரே.
அருட்பெரும் ஊற்றை அவர் திறக்க,
அறிந்து பொருளைச் சொல்வீரே!
ஆமென்.

அமைதி காப்போம்!

அமைதியாய் இருக்க அறிவீரே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:34-36.
34 இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள்.
35 அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.
36 அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
திருப்பணி செய்திடும் ஊழியரே,
தெய்வத்தின் திட்டம் தெரிவீரே.
ஒருசில இடங்களில் பேசாமல்,
ஊமையாய் இருப்பின் புரிவீரே.
கருப்பொருள் கற்கும் காலம்வரை,
கடவுளை மீறிச் செல்லீரே.
அருட்பெரும் ஊற்றை அவர் திறக்க,
அறிந்து பொருளைச் சொல்வீரே!
ஆமென்.

யார் விருப்பு?

அடியார் விருப்பா? ஆண்டவர் விருப்பா?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:33.
33 அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்துபோகையில், பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான்.

கிறித்துவில் வாழ்வு:
பேதுரு யோவான் யாக்கோபன்று,
பெரிதாய் ஒன்றும் கேட்கவில்லை.
தூதுரை கொடுக்க, இடங்கள் மூன்று,
துவக்குதல் தவிர நாட்டமில்லை.
மூதுரை என்று பலர் நினைத்தாலும்,
முதலில் இறைவிருப்பது இல்லை.
ஏதிடம் ஏற்றது இயேசு அறிவார்;
இவர் விருப்பறிந்தால் தீதில்லை!
ஆமென்.

அருஞ்செயல்!

திரைக் கதை மிஞ்சும் அருஞ்செயல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:30-32.
30 அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி,
31 அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
32 பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டுபேரையும் கண்டார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அரைத்தூக்கத்தில் அமிழும்போதும்,
ஆண்டவரிடத்தில் அண்டிடுவோம்.
உரைப்பதர்க்கரிய உண்மைப் பொருளை,
உறங்கா அவரில் கண்டிடுவோம்.
இரைப்பை நிரப்புதல் போதும் என்ற,
இன்றைய ஊழியம் விட்டிடுவோம்.
திரைக்கதை மிஞ்சும் அருஞ்செயல் கண்டு 
தெய்வ அரசினைக் கட்டிடுவோம்!
ஆமென்.

உள்ளிலும் உருவிலும் மாற்றம்!

உள்ளிலும், உருவிலும் மாற்றம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:28-29.

28 இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.
29 அவர் ஜெபம்பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது.

கிறித்துவில் வாழ்வு:
உம்மை வேண்டிப் பணியும் வேளை,
உள்ளில் தூய்மை வருவதினால்,
அம்மை யப்பன் என்னும் இறையே,
அடியர் உருவில் மாறுகின்றோம்! 
எம்மை ஆட்டி அலைக்கழித்த
ஈன அலகை மறைவதினால்,
செம்மை நாடிச் செல்வோருக்குச் 
சிறந்த வழியும் கூறுகின்றோம்!
ஆமென்.

தாய், தந்தை, உலகம்!

தாய், தந்தை, உலகம்!

கல்வி அறிவே செல்வம் என்று,
கற்க வைத்தார் எம் தந்தை.
நல்ல பண்பே வாழ்க்கை என்று,
நடக்க வைத்தார் எம் அன்னை.
இல்லை இவைகள் தேவையில்லை,
என்று பார்த்தது பணச் சந்தை.
எல்லோருக்கும் அறிவையூட்டும்,
இறையை மறப்பதால், நிந்தை!

-கெர்சோம் செல்லையா.