வரலாறு!

பழங்கதையல்ல, வரலாறு!


பாட்டியின் பாட்டி யாரெனக் கேட்டால்,

பழங்கதை என்று சொல்வோரே,

போட்டியில் நாளை பேரரின் பேரர்,

பொருந்தா உம் பெயர் சொல்லாரே!

நாட்டினை அறிய நடந்தது அறிவீர்;

நன்மை இதுவெனச் சொல்வாரே.

கேட்டினை நீக்க, ஆய்வுகள் செய்து,

கீழடிப் பெருமை சொல்வீரே.


-கெர்சோம் செல்லையா.

அணைக்கும் அன்பு!

அணைக்கும் அன்பு!                  கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:49-50.

49அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.
50அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு: 
என்னைச் சார்ந்த திருக்கூட்டந்தான் 
இறைவனின் மக்கள் என்றுரைத்தால்,
முன்னும் பின்னும் அறியா மூடன்,
முதலில் நான்தான், அன்பர்களே.
இன்னும் இதுபோல் இறையறிவின்றி,
இயம்பும் யாவையும் கைவிட்டு,
தன்னலந் துறந்த இயேசு போன்று,
தாழ்ந்து அணைப்போம், நண்பர்களே!
ஆமென்.