பிள்ளைபோல் வாழ்!

பிள்ளைபோல் வாழ்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:46-48.

46பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று.
47இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தி,
48அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பிள்ளை ஒன்றைத் தூக்கி எடுத்து,
பெரியோர் இவரே என்றுரைத்தீர்.
இல்லை இவரில் கள்ளம் செருக்கு;
இதுபோல் வாழென நன்குரைத்தீர்.
வெள்ளை அடித்தக் கல்லறையாக,
வெளியில் மட்டும் காட்டுகின்றேன்.
உள்ளம் கழுவும் உண்மை இறையே,
உம்மிடமே எனை நீட்டுகின்றேன்!
ஆமென்.