அருஞ்செயலும் ஆண்டவர் திட்டமும்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:43-45.
43அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக் குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங்குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகையில் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: |
44நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார். |
45அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்குத் தோன்றாமல் மறைபொருளாயிருந்தது; அந்த வார்த்தையைக் குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள். கிறித்துவில் வாழ்வு: அருஞ்செயல் கண்டு அதிசயித்தோம்; ஆண்டவர் திட்டம் அறிந்தோமா? பெருமிதம் கொண்டு புகழும் நாம், பேசும் அவர் சொல் புரிந்தோமா? ஒருமுறைகூட ஒப்படைப்போம்; உயிர்வாழ் நோக்கு உணர்வோமா? திருப்பணி என்றும் அவர் விருப்பாம்; தெரிந்து அவருடன் இணைவோமா? ஆமென். |