இறைப்பற்று என்றால் என்ன?

இறைப்பற்று என்றால் என்ன?


இறைப் பற்றென்று இயம்புவதெல்லாம்,

இன்னொரு உயிரை எடுப்பதுவா?

விறைப்பாய் நின்று  வீரம் பேசி,

வெறியால், நன்மை தடுப்பதுவா?

குறைத்துப் பார்த்து, கொடுமை செய்து,

குற்றம் புரிந்ததை எண்வோமா?

முறைப்படி வாழ, முடிவை எடுத்து,

முதற்கண் அன்பைப் பண்வோமா? 


-கெர்சோம் செல்லையா.

வெட்கப்படாதீர்!

வெட்கப்படாதீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9.26-27.

26என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.
27இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பற்றைப் பெற்றவர் மறைப்பதினால்,
பலபேர் நன்மை இழக்கின்றார்.
பெற்றக் கிறித்தவர் கொடுப்பதினால்,
பெரிதாய் வளர்ந்து தழைக்கின்றார்.
சற்றும் வெட்கம் கொள்ளாமல்,
சான்றாய் வாழ வருபவர் யார்?
முற்றுப் பெறாத இறையரசில்,
முடியா வாழ்வு பெறுபவரார்!
ஆமென்.