நாளை நடப்பதை நாமறியோம்!

நாளை நடப்பதை நாமறியோம்!


கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:22.

22மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.

கிறித்துவில் வாழ்வு:
நாளை நடப்பதை நாமறியோம்.
நடப்பதுங்கூடத் தானறியோம்.
வேளை வருவதை அறிந்தவராய்,
விண்ணின் கோனோ முன்னுரைத்தார்.
வாளை நம்பி விழுபவரோ,
வலிமையாகப் படை சேர்ப்பார்.
ஆளை மீட்க வந்தவரோ,
அப்படியின்றி, அன்புரைத்தார்!
ஆமென்.