ஏற்கவில்லை!

ஊரார் ஏற்கவில்லை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:5.5 உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:

உந்தன் அருளில் உரைக்கும் வாக்கை,

ஊரார் விரும்பி ஏற்கவில்லை.

மைந்தன் வழியில் கிடைக்கும் மீட்பை,

மயங்கும் மாந்தர் பார்க்கவில்லை.

செந்தமிழாகப் பாடிக் கொடுத்தும்,

செய்தி எவரையும் ஈர்க்கவில்லை.

எந்தையே இறையே, யான் தோற்றாலும்,

உந்தன் வாக்கு தோற்பதில்லை!

ஆமென்.