கையிலென்ன? பையிலென்ன?
கிறித்துவின் வாக்கு:லூக்கா 9:3-4.
3 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம்.

எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள்.

கிறித்துவில் வாழ்வு:
கையில் தடியை எடுக்கவில்லை;
காப்பவர் நம்முடன் வருவதனால்.
பையில் பணமும் அடுக்கவில்லை.
படைத்தவர் நாளும் தருவதனால்.
மெய்யில் உயிரை வைத்தவர்தான்,
மேலாம் பணிக்கு அழைக்கின்றார்.
ஐயா, இதனை மறந்தவர்தான்,
அவப் பெயரோடு பிழைக்கின்றார்!
ஆமென்.