பன்றியா? மனிதனா?

பன்றியா? மனிதனா?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:31-33.
31 தங்களைப் பாதாளத்திலே போகக்கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.
32 அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள்போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவுகொடுத்தார்.

அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனைவிட்டு நீங்கி, பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டது.

கிறித்துவில் வாழ்வு:
பன்றியும் பசுவும் கன்றும் காளையும்,
படைத்தவர் தந்த உயிரினமே.
என்றிருந்தாலும், இறைவன் விருப்பில்,
ஏழையின் மீட்பு உயரிடமே!
இன்றிதை மறந்து, நன்றியும் துறந்து,
எளியரை ஒடுக்கும் மானிடமே,
கொன்றிடு உந்தன் கொடுமை நினைப்பை;
கொடுப்பாய் உன்னை வானிடமே!
ஆமென்.

No photo description available.
Like