மாட்டுப் பொங்கல் நாளில்,

மாட்டுப் பொங்கல் நாளில்,
மறைந்த எங்கள் தந்தை
கொ.செல்லையா அவர்களின்,
15-ஆம் ஆண்டு நினைவு நாள்!

கோடாய், குன்றாய், குளிரும் ஆறாய்,
வாடாதிருக்கும் வளத்தில் நூறாய்,
தேடாரையுமே இழுக்கும் பேறாய்,
தெரியும் எங்கள் திருவட்டாறே!
கேடாய் கையில் வாங்காய் என்று,
கெடுவார் முன்பு உரைத்து அன்று,
மாடாய் உழைத்த தந்தை இன்று,
மறைந்த நாளை மறந்திட்டாயே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 2 people