பாதையில் விழுந்த விதைகள்!

பாதையில் விழுந்த விதைகள்!
கிறித்துவின் வாக்கு:லூக்கா 8:11-12.
11 அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
12 வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.

கிறித்துவில் வாழ்வு:
தூதின் நறுமணம் ஏற்காதவர்தான்,
தூய்மை நேர்மை வெறுக்கின்றார்.
காதில் விழுந்த இறைவன் வாக்கைக்
கருத்தில் கொள்ள மறுக்கின்றார்.
தீதில் அமிழும் நெஞ்சத்தார்தான்,
தீவிரம் வாழ்வை அறுக்கின்றார்.
பாதைவழியில் விழுந்த வித்தாய்,
பறவை உண்ணப் பறக்கின்றார்!
ஆமென்.

Image may contain: bird