உங்கள் பற்றுறுதி உங்களை மீட்கும்!

உங்கள் பற்றுறுதி உங்களை மீட்கும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7: 47-50.
47 ஆதலால் நான் எனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்ற சொல்லி;
48 அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
49 அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார்? என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
50 அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பற்றுறுதி கொண்டவரின்
பாவமெல்லாம் ஒழியும்.
பெற்றுவரும் நன்மையினால்,
பேரன்பைப் பொழியும்.
கற்றறிந்த இறையறிவைக்
காண்பவர்க்கு மொழியும்.
சுற்றுமுள்ளோர் மீட்புறுவார்;
திறந்ததுவே வழியும்!
ஆமென்.

Image may contain: 1 person