எண்ணிலடங்கா என் பாவம்!

எண்ணிலடங்கா என் பாவம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:40-42.
40 இயேசு அவளை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார். அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.
41 அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும் மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.
42 கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பண்ணும்போது தீமையென்று,
பாவி எனக்குப் புரியவில்லை.
எண்ணும்போது எண்ணிக்கையும்
எத்தனையென்று தெரியவில்லை.
மண்ணாய் நானும் அழியாதிருக்க,
மாபெரும் அன்பைப் பொழிபவரே,
விண்ணை எட்டும் மன்னிப்பருளை,
விழுந்து பணிந்து மொழிவேனே!
ஆமென்.

Image may contain: sky, outdoor and text