ஊண் உடை அன்று!

ஊண் உடை அன்று!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:33-35.
33 எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.
34 மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன்என்கிறீர்கள்.
35 ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
உண்டு மகிழ்ந்து  உரைப்பாருண்டு;
உண்ணா நிலையில் உரைப்பதுமுண்டு.
முண்டுமின்றி உழைப்பாருண்டு;
முதற்தர உடைகள் உடுப்பதுமுண்டு.
கொண்டுவருவார் ஊண் உடையன்று;
கொடுமை வெறுக்கும் அறிவே நன்று.
கண்டுகொண்ட பிள்ளைகள் இன்று,
கடவுளரசில் வாழ்வார் நன்று!
ஆமென்.

குறைகூறும் கூட்டம்!

குறைகூறும் கூட்டம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா: 7:31-32.
31 பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்?
32 சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
குனிவது குற்றம், நிமிர்வது குற்றம்,
குறைதான் கூறும் நம் சுற்றம்.
இனிமை பெற்றும், ஏற்றம் உற்றும்,
எண்ணம் கெட்டால் பிதற்றும்.
தனியாய் அமர்ந்து, தம்குறை உணர்ந்து,
தம்மைத் திருத்துவதே மாற்றம்.
பணிவாய் நடந்து, பண்புகள் புகழ்ந்து,
பாராட்டார்க்கு ஏமாற்றம்!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions