நாட்டை வளைத்தது போதாதென்று,
நாம் நுழைந்தோம் அவர் காட்டில்.
வீட்டை இழந்த விலங்குகள் இன்று,
விருந்திற்கு வந்தார் நம் வீட்டில்.
மாட்டை அடித்து, மானையும் பிடித்து
மழைதரும் மரத்தையும் அழிக்கின்றோம்.
காட்டில் வாழும் விலங்கிடமிருந்து,
கற்க எப்போது விழிக்கின்றோம்?
-கெர்சோம் செல்லையா.
