ஐயம் கொள்ளும் அடியவரே!

ஐயம் கொள்ளும் அடியவரே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:17-19.
17 இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று.
18 இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து,
19 நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.

கிறித்துவில் வாழ்வு:
ஆவியில் பிறந்த அடியவரும்,
அவ்வப்போதுப் பதறுகிறார்.
பாவியர் துன்பம் கொடுப்பதனால்,
பார்வை விலகித் தவறுகிறார்.
சாவினை நினைத்துச் சாகாமல்,
சரியாய் அவர் பணி செய்திடுவார்,
மேவிய மீட்பைப் பெறுவதுடன்,
மேலும் விண்முடி எய்திடுவார்!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions