தலைவர்களே கேளுங்கள்!

தலைவர்களே கேளுங்கள்!

இந்தியர் வாழவே வாழ்வோம்;
ஏழையர் விழுவின் விழுவோம்.
முந்தைய நாள்போல் பிரியோம்;
முரடராய், வெறியராய்த் திரியோம்.
தந்தையாய்ப் பிறரை மதிப்போம்;
தவற்றினை மட்டுமே மிதிப்போம்.
விந்தையாய் உயர உழைப்போம்.
விண்ணின் அருளால் தழைப்போம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text