ஆவியர் வழிநடத்தல்

ஆவியர் வழிநடத்தல்
இறைவாக்கு: லூக்கா 2:26-28.
26 கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
27 அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,
28 அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:

கிறித்துவில் வாழ்வு:
நாளை நடப்பதை நாம் அறியோம்;
நடத்தும் ஆவியர் அறிகின்றார்.
வேளை வருமுன் பணிமுடிக்க,
வேண்டும் வலுவும் தருகின்றார்.
ஏழை என்னால் இயலாது,
என்று எங்கும் கூறாது,
தோழர் ஆவியர் துணை கேட்டு,
தொடர்வோருக்கு அருள்கின்றார்!
ஆமென்.

Image may contain: text
LikeShow More Reactions

Comment

நற்றமிழை நாம் அழித்தோம்!

​நற்றமிழை நாம் அழித்தோம்!

நாற்றம் எனும் நறுமணத்தை
நாம் இன்று இழந்தோம்.
தூற்றுகின்ற சொல்லாக்கித்
தூய மயிர் களைந்தோம்.
ஏற்ற பொருள் சேரியினை
இழிவாக்கிப் பழித்தோம்.
மாற்றம் என நாம் நம்பி,
மயக்கு தமிழ் அழித்தோம்!
-கெர்சோம் செல்லையா.
பி.கு:
நாற்றம் = நறுமணம் (நாத்தம் அல்ல!)
மயிர் = முடி
சேரி = சேர்ந்து வாழும் இடம்

இறைப் பற்றும் நேர்மையும்!

இறைப் பற்றும் நேர்மையும்!
இறைவாக்கு: லூக்கா 2:25.
25 அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்தஆவி இருந்தார்.
இறைவாழ்வு:
இறைப் பற்று கொண்டவர் என்றால்,
இறைவனின் பண்பு பெற்றிடவேண்டும்.
நிறைவான நேர்மை வழியில்,
நித்தம் நடந்து கற்றிட வேண்டும்.
குறைப் பேறாய் பிறந்த நானோ,
குற்றம் பெருகத் தலை குனிந்தேன்.
சிறைப் பறவை ஆகாதிருக்க,
சீரேசுவே உமைப் பணிந்தேன்!
ஆமென்.

Image may contain: night